'பொருள்'காட்சி

'பொருள்'காட்சி

உண்மை உரைக்கும்
உன்நிலை வெட்கப்பட
வேண்டியதென்றும்
தீர்வையும்
மறக்காமல் சான்றும்  தரும்

நீ யோசித்தால்
நஷ்டம் உனக்குதான்
என ஓங்கி உரைக்கும்


உன்னை விட்டுவிட்டு
கட்டமைத்த சாகச பிம்பம் காட்டி
என் பேச்சை கேள்
எனவும்  ஓங்கி உரைக்கும்

நான்கே நான்கு பேர்க்காக
நடக்கும் 'பொருள்'காட்சி
பார்வையாளர் எதையும்
பார்ப்பதில்லை ஆனாலும்
கல்லா  நிறையும்



பொறியில் இருந்துகொண்டு
சிறு எலி தொந்தரவு  ஒழிக்க
பொறி வைக்கும்
ஆறறிவு
வினோதன் !

Comments

Popular posts from this blog

ஓவியங்கள்

இலக்கணப்பிழை

இறந்த காலத்திற்கு..