கார் காலம்
கருமேகங்கள் திரண்டு வ ந்து
பயம் காட்டிப்போகின்றன
மரங்கள் தன் அத்தனை
கரங்களையும் ஆட்டி வரவேற்க்கின்றன
பறவைகள் சில அவசரமாக
கூடு தேடி செல்கின்றன
சின்னச்சின்ன் வேர்கள்கூட
புலன்கள் தீட்டி காத்திருக்கின்றன
காற்றும் தென்றலாய் தன்
சந்தோசத்தை பகிர்ந்துகொள்கிறது
உயிரினங்கள் காத்திரூபதும்
கார்மேகங்கள் உணவு ஊட்டுவதும்
இயற்கையை கண்டு வியக்கிறேன்
கண்கள் இரண்டும் திற
ந்தும்
மனமும் உடலும் காத்திருக்கின்றன
மழைக்கே உரித்தான பரவச நிமிடங்களுக்காக
உயிர்த்துளியாய்
மழைத்துளிகள் ஒவ்வொருவருக்கும்
வஞ்சனையில்லாமல்
பகிர் ந்தளிக்கப்படுகிடறது
பரவசமாய்
மனம் மட்டும் நனைகிறது
உடலை விட்டுவிட்டு..
Comments
Post a Comment