பன்னீர் பூக்கள்
பூக்கள் பன்னீர் பூக்கள் ..
இம்மழையும் இளவெயுலும்
நம் உள்ளத்தின் வண்ணங்கள்
முதுமையிலும் நினைஒவியமாய்
ஒளிர்ந்துடுமே .. ஒளிர்ந்துடுமே ..
உன்விழியில் என்வுருவம்
என்விழியில் உன்வுருவம்
நிலைத்திடவே காலம்
கண்மூடிடுமே..கண்மூடிடுமே..
பூக்கள் பன்னீர் பூக்கள்
நீயும் நானும் ..
என் இமைகள்
சோர்வில்லாமல் உனை
வண்ண ஒளியாய்
மனதினிலே
பதிந்திடுமே.. பதிந்திடுமே ..
நம் உள்ளத்தின் வண்ணங்கள்
முதுமையிலும் நினைஒவியமாய்
ஒளிர்ந்துடுமே .. ஒளிர்ந்துடுமே ..
பூக்கள் பன்னீர் பூக்கள்
நீயும் நானும் ..
திசைகள் பத்துண்டு
கைகள் இனைந்திருந்தால்
எத்திசை சென்றாலும்
தித்திக்குமே ...தித்திக்குமே ...
பூக்கள் பன்னீர் பூக்கள்
நீயும் நானும் ..
உன்விழியில் என்வுருவம்
என்விழியில் உன்வுருவம்
நிலைத்திடவே காலம்
கண்மூடிடுமே..கண்மூடிடுமே..
பூக்கள் பன்னீர் பூக்கள்
நீயும் நானும் ..
****நன்றி: என் முயற்சிக்கு வித்திட்ட இப்பாடலை உருவாக்கிய குழுவிற்கு
Comments
Post a Comment