வரம்தான்
அழகை ஆராதிக்கும் கண்களிலிருந்து விடுதலை
இறகை பிடுங்கும் கரங்களிலிருந்து பாதுகாப்பு,
கூண்டிலடைத்து “அன்பு” பெயரில் சிறை இல்லை.
இருவழியிலும் கிடைத்ததை
இரக்கம் கொண்டு பகிர்ந்துண்ணும் உறவுகள்,
கூடு கலைந்தாலும் கவலை இல்லை —
மீண்டும் கலைக்க யாரும் வரமாட்டார்கள்.
இயற்கையே முடிவை எழுதும்,
கண்காட்சிப் பெட்டியில் வைத்து
காட்சிப் பொருளாக்க யாருக்கும் ஆசை இல்லை.
‘அமாவாசை’ மாதம் ஒருமுறை
அழைத்து விருந்தளிக்கும் உலகம்,
செல்பி எடுத்து வலையில் பதிவிட
யாரும் துரத்தமாட்டார்கள்.
“மொழி கொச்சை” என சிரிக்கும் போது கூட
ரசிகர் தொல்லை இல்லை,
அதிபுத்திசாலி கூட்டத்தின் நடுவில்
இடம் கேட்க வேண்டிய அவசியமில்லை.
வரம்தான்.
இப்படியும் ஒரு வரம்.... கவிதைக்கான எண்ணங்கள் நன்று. தொடரட்டும் உங்கள் பதிவுகள்.
ReplyDelete