இளவேனிற்காலம்
இளவேனிற்காலம்
வளர்ச்சியை நிறுத்தி
பலமாதாமாகிய
குச்சி குச்சியான
மரங்களும்
உயிரை ஒரு
புள்ளியில் ஒடுக்கியபடி
மரப்பொந்துகளில்
முயல்களும் அணில்களும்
பூமிக்கடியில் துளைகளில்
எலிகளும்
உறைந்த நதியின் மேல்
வெறித்தப்படி நாரைகளும்
நதியின் கீழே
சன்னமான நீரோட்டத்தில்
சவமாய் மீன்களும்
கடுங்குளிர் போனாலும்
சமீபத்திய ஞபாகத்தால்
அனைத்தும்
இளவவேனிற்காலத்திற்காக
காத்திருக்கின்றன
கண்மணி
உன் மனத்தை
துயில் எழுப்பு
கவிதையாய்
காதல் செய்து
நம் கதகதப்பை
காற்றில் கரைப்போம்
இளைகள் துளிர்க்க
பூக்கள் மலர
ஒடுங்கிய உடல்கள் மீள
உயிரோட்டம் மீண்டும் துவங்க
அறிவிப்போம்
இளவவேனிற்காலத்தை
வா..
கண்மணி
உன் மனத்தை
துயில் எழுப்பு
Comments
Post a Comment