தொடங்காத திரைப்படம்

சாவு வீட்டில்
மகன் வயதில்
மலங்க விழித்தபடி
ஒருவன்

யாரப்பா நீ ?

"எங்க அப்பா ...""
என ஆரம்பித்ததும்

புருவம் உயர்த்தி
செவி தீட்டி
விழித்தன
ஊர் சனம்

"இவரிடம் கடன் வாங்கியிருந்தார் "
என முடித்ததும் "

அவ்வளவுதானா?

திரைப்படம் தொடங்காத
ஏமாற்றத்தில்
விழிகள் தாழ்ந்தன  

Comments

  1. Replies
    1. நன்றி!! உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்

      Delete

Post a Comment

Popular posts from this blog

ஓவியங்கள்

இலக்கணப்பிழை

இறந்த காலத்திற்கு..